திருச்சி

விமான நிலையத்தில் ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

DIN


திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
திருச்சியில் இருந்து சனிக்கிழமை சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
அப்போது காரைக்காலைச் சேர்ந்த மணிவண்ணன்  (37) என்பவர் ரூ. 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, ஸ்டெர்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. 
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT