திருச்சி

குடிநீர் கோரி சிக்கத்தம்பூரில் மறியல்

DIN

துறையூர் அருகிலுள்ள சிக்கத்தம்பூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கத்தம்பூர் கிராமத்தில் 20 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டாலும், ஊராட்சி நிர்வாகம் மின் மோட்டார்களை வைத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.  கடந்த 2 மாதங்களாக இப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து  துறையூர் ஒன்றிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சிக்கத்தம்பூர் கிராம மக்கள்,  துறையூர்-ஆத்தூர் சாலையில்  செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT