திருச்சி

லால்குடியில் ரயில் மோதி இளைஞர் பலி

DIN

லால்குடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது,  ரயில் மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி வட்டம், பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ச. பாண்டியன் (30). சொந்த வேலையாக லால்குடி பரமசிவபுரத்துக்கு வந்த இவர், புதன்கிழமை அதிகாலை ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.
அப்போது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் பாண்டியன் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் ரயில்வே போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT