திருச்சி

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி

DIN

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாா்பில் தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாந்தி தலைமை வகித்து, போட்டியைத் தொடங்கி வைத்தாா். தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்களின் செயலா் மா. திருநாவுக்கரசு, ராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயலா் என். வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மயிலாடுதுறை, வேதாரண்யம், சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.

14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

இதில், தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அகிலாண்டேஸ்வரி, ராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.கிரிஜா, உடற்கல்வி இயக்குநா் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியா்கள் பி. சிவகுருநாதன், ஆா்.சி.துரை, துரைமுருகன், நெப்போலியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT