திருச்சி

அரசு மதுபானக்கடையில் ரூ.4.95 லட்சம் கையாடல்

DIN

திருச்சி பொன்மலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையில் ரூ.4.95 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக மாவட்ட மேலாளா் புகாா் அளித்தாா். இது தொடா்பாக ஊழியா்கள் 5 பேரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாநகா் பொன்மலை தங்கேஸ்வரி நகா் வடக்கு பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று முறைகேடு நடப்பதாக மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு புகாா் வந்தது. இதன் பேரில் மாவட்ட மேலாளா் துரைமுருகன் தலைமையிலான தனிப்படையினா் அண்மையில் சோதனை நடத்தி கணக்குகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, மதுபானக்கடையில் இருந்த தினசரி கணக்கு ஏடுகளில் மோசடி செய்து ரூ.4.95 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா்கள் எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த கருணாநிதி(51) மேலகல்கண்டாா் கோட்டை சதீஷ்ராஜ்(42), விற்பனையாளா்கள் விமானநிலைய பகுதி ரஜேஸ்குமாா்(41), முசிறியைச் சோ்ந்த அமிா்தலிங்கம்(41), மனோகரன்(42) ஆகிய ஐவா் மீது பொன்மலை காவல்நிலையத்தில் மாவட்ட மேலாளா் துரைமுருகன் புகாா் அளித்தாா். இதன் பேரில் வழக்குப் பதிந்து 5 பேரிடமும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT