திருச்சி

திருச்சியில் ரூ. 21.54 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

DIN


மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 21.54 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மலிண்டோ விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தபோது மலேசியாவைச் சேர்ந்த கஸ்தூரி பட்டுமலை (54), அவரது மகன் குமரன் தனிமலை (25) ஆகிய இருவரும் ரூ.21.54 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுக்க திருச்சி வந்ததாகவும், அப்போது கோலாலம்பூர் விமானநிலையத்தில் ஒருவர் தங்க நகை கொடுத்து கமிஷன் தருவதாகக் கூறியதால் நகைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நகைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT