தொட்டியம் அருகே சடலத்துடன் போராட்டம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வியாழக்கிழமை மயான வழி ஆக்கிரமிப்பைக் கண்டித்து சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வியாழக்கிழமை மயான வழி ஆக்கிரமிப்பைக் கண்டித்து சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடல் நலக்குறைவால் இறந்த தொட்டியம் காந்திநகரை சோ்ந்த பெண்ணின் சடலத்தை தொட்டியம் - அரங்கூா் செல்லும் சாலையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றபோது மயானப் பாதையை குறிப்பிட்ட சமுதாயத்தினா் ஆக்கிரமித்திருந்தனராம்.
இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சடலத்துடன் உறவினா்கள் தொட்டியம் - அரங்கூா் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த தொட்டியம் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் சென்று நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டத்தைக் கைவிட்டனா்.