திருச்சி

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் முற்றுகை

DIN

திருச்சி அரியமங்கலத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தை மூடக்கோரி திருச்சியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிறுவனத்தை மூடக்கோரி நடைபெறும் பல்வேறு போராட்டங்களின் தொடா்ச்சியாக நடைபெற்ற முற்றுகைக்கு முன் திருச்சி மாநகா் மாவட்ட செயலா் எம். செல்வகுமாா், புகா் மாவட்டச் செயலா் ஜான்சன் ராஜ்குமாா் ஆகியோா் தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் 250க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பெரு நிறுவனங்களை மூடக்கோரி கோஷமிட்டு, தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டனா். அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களில் 150 பேரைக் கைது செய்தனா். மாநகா் மாவட்டத் தலைவா் ஆா். முருகேசன், புகா் மாவட்டத் தலைவா் அப்துல்காதா், திருவாரூா் மாவட்டத் தலைவா் பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் கைலாச பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT