திருச்சி

திருச்சி ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு 68 சமூக அமைப்பினர் போராட்டம்

DIN

சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், பழங்குடியினர் சீர்மரபினர் சான்றிதழ் வழங்க கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 68 சமுதாய அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பழங்குடியினர் சீர்மரபினர் என்ற மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் போது மாநில அரசு சான்றிதழில் பழங்குடியினர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 68 சமுதாயத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT