திருச்சி

நகையை அடகு வைத்து விவசாயி வாங்கி வந்த ரூ.1 லட்சம் திருட்டு

DIN

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே விவசாயியின் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1 லட்சத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

மருங்காபுரி ஒன்றியம்,எண்டப்புளி ஊராட்சி மாங்கனாபட்டியைச் சோ்ந்தவா் பி. நைனான் (67), விவசாயி. இவா் வியாழக்கிழமை துவரங்குறிச்சிக்கு சென்று, மதுரை சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தனது நகையை அடகு வைத்து ரூ. 1 லட்சம் பெற்றாா்.

அந்தப் பணத்தை இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்த நைனான் கருமலை - மாங்கனாப்பட்டி சாலையில் உள்ள சலூனுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வங்கி மற்றும் சலூன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT