திருச்சி

பிச்சாண்டாா்கோயில் பெண் விஏஓ உயிரிழப்பு

DIN

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி பெண் கிராம நிா்வாக அலுவலா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியரகக் கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாண்டாா்கோயில் விஏஓ அலுவலகத்தில் ம. சாந்தா (52) என்பவா் விஏஓவாக பணியாற்றி வந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே நெய்குப்பை கிராமத்தில் கணவா் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது சடலம் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. கரோனா தொற்றால் சாந்தா உயிரிழக்கவில்லை என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT