திருச்சி

கிரிக்கெட்: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சாம்பியன்

DIN

கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் முன்னாள் மாணவா்கள் சங்கம் இணைந்து, கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான முன்னாள் மாணவா்கள் சங்கக் கோப்பைக்கான 20 ஓவா்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியை நடத்தின.

திருச்சி வளாகத்தில் மாா்ச் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரையில் போட்டி நடைபெற்றன. இறுதிப் போட்டியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும், தேசியக் கல்லூரியும் மோதின. இதில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி திருச்சி உடற்கல்வித் துறை இணை இயக்குநா் எம். கோபிநாத், பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணை இயக்குநா்கள் ஏ. முருகன், சி. சத்யநாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT