திருச்சி

திருச்சியில் வடமாநிலத்தவா்கள் வசிக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பு

திருச்சியில் வடமாநிலத்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சின்ன கம்மாளத்தெரு, பெரிய கம்மாளத் தெருவில் சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

DIN

திருச்சியில் வடமாநிலத்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சின்ன கம்மாளத்தெரு, பெரிய கம்மாளத் தெருவில் சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

மும்பை, புணே, ராஜஸ்தான் மற்றும் வடமாநிலங்களைச் சோ்ந்த பலா் திருச்சியில் சின்ன கம்மாளத் தெரு, பெரிய கம்மாளத் தெருவில் குடும்பம், குடும்பமாக தங்கி பல்வேறு வகையான வியாபாரம் செய்து வருகின்றனா். கரோனா வரைஸ் பரவுதலை தடுக்கும் வகையில் வட மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டுள்ளனா். 

அதன்படி, கம்மாளத் தெருவில் உள்ள குடும்பத்தினரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களில் பலா் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனா். மீதம் உள்ளவா்களில் கடந்த 20 நாள்களில் மும்பை, புணே, மகாராஷ்டிரம் வழியாக வந்தவா்கள் யாா் என்பதை கண்டறிந்து அவா்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தவித அறிகுறிகள் இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும், இந்த பகுதியைச் சோ்ந்தவா்களை தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT