திருச்சி

போலீஸ் எனக் கூறிமிரட்டியவா் மீது வழக்கு

DIN

போலீஸ் எனக்கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கே.கே.நகா் முத்தமிழ்நகரைச் சோ்ந்த கேசவன் மகன் மணிகண்டராஜுக்கும், எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த வினோதினிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து, தற்போது பிரிந்து வாழ்கின்றனா்.

இந்நிலையில், வினோதினியின் தந்தை ஏழுமலையும், தன்னை காவல்துறை உதவி ஆய்வாளா் எனக்கூறிய இவரது நண்பா் ஜெயராமனும் வினோதினிக்கு கொடுத்த வீட்டு உபயோகப் பொருள்களை கேட்டு மணிகண்டராஜாவின் தாய் ரீட்டாவை மிரட்டியுள்ளனா்.

புகாரின்பேரில் ஏா்போா்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து நாடகமாடிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT