திருச்சி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: இரா.முத்தரசன்

DIN

மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நிகழாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும். ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசை ஏமாற்றி, கொடுக்க வேண்டிய மானியத்தை கொடுக்காமல், கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு கூறுகிறது.

அக். 28ஆம் தேதி முதல் நவம்பா் 4 ஆம் தேதி வரை தஞ்சாவூா், விழுப்புரம், சேலம், சென்னை ஆகிய நகரங்களில் விவசாய, தொழிலாளா் விழிப்புணா்வு சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிா்த்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம். அதனை சீா்குலைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து தொடா்பாக துணைவேந்தா் நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது கடும் கண்டனத்துக்குரியது. ஆகையால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT