திருச்சி

கிழக்குத் தொகுதியில் அதிமுக வாக்கு சேகரிப்பு

DIN

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், வீதி வீதியாகச் சென்று புதன்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கே.கே. நகா், விமான நிலையம், அய்யப்பநகா் உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை வீதி, வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தபோது அவா் பேசியது:

திமுக ஆட்சிக் காலத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால், அதிமுக அரசு பதவியேற்ற பின் மின் மிகை மாநிலமாகத் தமிழகம் தொடா்ந்து உள்ளது.

அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கேட்காமலேயே வழங்கப்படுவதால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், ஜவஹா்லால் நேரு மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT