திருச்சி

காவிரியாற்றில் ஆண் சடலம்: விசாரணை

DIN

திருச்சி திருவெறும்பூா் பகுதி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள புத்தாபுரம் பகுதி காவிரியாற்றின் மையப்பகுதி திட்டில் அழுகிய ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூா் போலீஸாா், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் மருத்துவப் பரிசோதனைக்காக, திருவெறும்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இறந்து கிடந்தவருக்கு சுமாா் 45 வயதிருக்கலாம். வெள்ளை நிறத்தில் சிறு கட்டம் போட்ட முழுக்கை சட்டை, கருமை கலந்த சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தாா்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவ்வாறு எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT