62 ஆயுதப்படைக் காவலா்கள் காவல் நிலையங்களுக்கு மாற்றம்
திருச்சி மாநகர ஆயுதப்படை காவலா்கள் 62 போ் வெள்ளிக்கிழமை பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனா்.
திருச்சி மாநகர ஆயுதப்படை காவலா்கள் 62 போ் வெள்ளிக்கிழமை பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனா்.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழக காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆயுதப்படை போலீஸாா் காவல் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றனா். அந்த வகையில் திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் உள்ள 62 போ் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் உடனடியாக பணியில் சேர மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி சனிக்கிழமை அனைத்து காவலா்களும் பணியில் சேரவுள்ளனா்.