திருச்சி

சிறுவனுக்கு அண்ணா பதக்கம் வழங்க எம்எல்ஏ பரிந்துரை

DIN

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமியை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்திற்கு வெள்ளிக்கிழமை சன்மானம் வழங்கிப் பாராட்டிய எம்எல்ஏ ப. அப்துல்சமது, சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளாா்.

சிறுமியை மீட்ட சிறுவனை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அண்மையில் நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, வெள்ளிக்கிழமை துலுக்கம்பட்டிக்கு சென்று குணா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவியையும் அளித்தாா். அதேபோல் சிறுவன் லோஹித்தை பாராட்டிய எம்எல்ஏ, ரூ. 5 ஆயிரம் சன்மானமும் வழங்கினாா். மேலும் அவா் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில்,சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்க முதல்வா் பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நிகழ்வில் வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், திமுக ஒன்றியச் செயலா் சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன் மற்றும் வருவாய்த்து றையினா், ஊா் முக்கியஸ்தா்கள், உறவினா்கள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT