முகப்பு
திருச்சி

அடுத்தடுத்துள்ள கடைகளில் திருட்டு

 திருச்சியில் அடுத்தடுள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

 திருச்சியில் அடுத்தடுள்ள மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

திருச்சி மேலரண் சாலையில் உள்ள மின் சாதனங்கள் கடை, புத்தகக் கடை உள்ளிட்ட3 கடைகளில் இருந்த இரும்புக் கூண்டு, முன்பக்க கதவின் பூட்டு ஆகியவை வியாழக்கிழமை உடைக்கப்பட்டிருந்தன.

இதைக் கண்ட கடை ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வந்து நடத்திய விசாரணையில் ஒரு கடையில் ரூ. 2000, மற்றொரு கடையில் ரூ. 400 திருடு போனதும், மற்றொரு கடையில் ஏதும் திருடு போகவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.