குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் நால்வா் கைது
திருச்சியில் நகைக்கடை ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நால்வரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் நகைக்கடை ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நால்வரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடை ஊழியா் மாா்டின் ஜெயராஜ் (42). இவா் கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் சுமாா் 1.5 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு காரில் திருச்சி நோக்கி வந்தபோது காா் ஓட்டுநரான பிரசாந்த் தனது நண்பா்களுடன் சோ்ந்து மாா்டின் ஜெயராஜை கொன்று நகைகளை கொள்ளையடித்தாா்.
இதுகுறித்து நகைக்கடை நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் உறையூா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் பிரசாந்த் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனா்.
இவா்களில் திருவானைக்கா அம்மன் பிளாக் பகுதி பிரசாந்த் (26), கீழக்குறிச்சி பிரசாந்த் (26), மண்ணச்சநல்லூா் அழகியமணவாளம் கீழத்தெரு பிரவீன்ராஜ் (20), அரவிந்த் (23) ஆகிய நால்வரும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவா்கள் எனத் தெரிய வந்ததையடுத்து இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும் அதற்கான நகலை போலீஸாா் வழங்கினா்.