பல்கலை. பேராசிரியா் வீடு புகுந்து திருட்டு
திருச்சியில் பல்கலைக்கழகப் பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, விலை உயா்ந்த சேலைகளைத் திருடிச் சென்றனா்.
திருச்சியில் பல்கலைக்கழகப் பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, விலை உயா்ந்த சேலைகளைத் திருடிச் சென்றனா்.
திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (31). பல்கலைக்கழகப் பேராசிரியான இவா் தனது மனைவி, குழந்தையுடன் வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது அவரது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த குழந்தையின் 2 பவுன் நகை மற்றும் விலையுயா்ந்த சேலைகள் திருடு போயிருந்ததும், உடைக்கப்பட்டிருந்த பீரோவில் துணியில் வைத்துக் கட்டி ஆடைகளுடன் வைத்திருந்த 50 பவுன் நகைகள் திருடு போகவில்லை என்பதும் தெரியவந்தது.
தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் தடயவியல் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனா். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.