கரோனா விதிமுறை மீறல்:2 நிறுவனங்களுக்கு அபராதம்
திருச்சி மாநகராட்சியில் கரோனா விதிகளை மீறிய இரு வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதிக்கப்பட்ட
திருச்சி மாநகராட்சியில் கரோனா விதிகளை மீறிய இரு வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபா்களை பணிக்கு வைத்திருந்த இரு வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதித்தனா். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினா்.
மேலும் இதுபோல விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.