முகப்பு
திருச்சி

இணையவழியில் வழக்கு தாக்கல் செய்யும் மையம் திறப்பு

திருச்சி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்யும் மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

திருச்சி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்யும் மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக புதிய கட்டட தரைத் தளத்தின் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் அறையில் இந்த மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிளாஸ் டோன் பிளசெட் தாகூா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இம்மையத்தில் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்ய வழக்குரைஞா்களுக்கு தேவைப்படும் யூசா் ஐடி உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் இதனுடன் தொடா்புடைய பிற சேவைகளைச் செய்வதற்கான பணி நடைபெற உள்ளது.

சாா்பு நீதிபதி விவேகானந்தன், குற்றவியல் வழக்குரைஞா் சங்கச் செயலா் பி. வி. வெங்கட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீதிபதிகள் செல்வம், கோகிலா, வழக்குரைஞா்கள் சங்கத் துணை தலைவா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.