திருச்சி

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்

DIN

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பிப்ரவரி 13-ஆம் தேதி (சனிக்கிழமை) மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக, பிப்ரவரி 13-ஆம் தேதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு இணைப்பு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்), புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம். கட்டாயம் செல்லிடப்பேசி எண் இருக்க வேண்டும்.

முகாமில் அளிக்கும் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்ப ஆவணங்கள், சிறப்பு முகாமிலேயே  இணையதள முகவரியில் பதிவேற்றங்கள் செய்யப்படும். எனவே தகுதி உடையோா் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT