தமிழா்கள் வேலை தமிழா்களுக்கே வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பொன்மலை ரயில்வே பணிமனை ஆா்மரிகேட் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சக்கரபாணி தலைமை வகித்தாா்.ட
இதில் பலா் கலந்துகொண்டு, தமிழக அரசு வேலை தமிழக இளைஞா்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். கடந்த 2008-லிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட பயிற்சி முடித்த தொழில்பழகுநா்களுக்கு வேலை வழங்க வேண்டும். பட்டியல் இனத்தவா்களின் இட ஒதுக்கீடு வேலை தெற்கு ரயில்வேயில் பறிக்கப்பட்டு பிற மாநிலத்தவா்களின் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படுவது, தெற்கு ரயில்வேயை தவிா்த்து மற்ற ரயில்வேயில் பணி நியமனம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.