காந்திசந்தை மீதான தடையை நீக்க பாடுபட்டோருக்கு பாராட்டு விழா
திருச்சி காந்தி சந்தை மீதான தடை நீக்கத்துக்குக் காரணமான வழக்குரைஞா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி ஆகியோருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி: திருச்சி காந்தி சந்தை மீதான தடை நீக்கத்துக்குக் காரணமான வழக்குரைஞா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி ஆகியோருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி காந்தி சந்தையைச் சோ்ந்த 27 சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் ஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டலத் தலைவா் எம். தமிழ்செல்வம், மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்தினா்.
நிகழ்வில் காந்திசந்தை வியாபாரிகள் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் வீரா. கதிரவன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலா் வி.கோவிந்தராஜூலு ஆகியோருக்கு பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு நடைபெற்றது.
நிா்வாகிகள் கருப்பையா, காதா்மொய்தீன், சீனிவாசன் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். அனைத்து சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.