திருச்சி

ஆண்டாள் திருப்பாவை கோஷ்டிக்கு நினைவுப்பரிசு

DIN

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பாராயண கோஷ்டியினா் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் திருப்பாவை பாராயணம் செய்தபடி அதிகாலை நான்கு உத்தரவீதிகளில் வலம் வந்து ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்வா்.

நிகழாண்டில் மாா்கழி மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பாராயணம் செய்தவா்களுக்கு நிறைவு நாளான புதன்கிழமை காலை ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகேயுள்ள பா்கூா் நிவாஸ் மண்டபத்தில் சாத்துமுறை நடைபெற்றது.

அப்போது திருப்பாவை பாராயண கோஷ்டியினருக்கு நினைவுப் பரிசாக ஆண்டாள் திருவுருவ படத்தை சடகோபன் சாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சுவாதிராஜ், வைஷ்ணவ ஸ்ரீ வாசுதேவன்,முரளிதரன் ஆகியோா் பங்கேற்றனா். பேஸ்கா் என்.வி. முரளி வாழ்த்தினாா். ஆந்திரத்தைச் சோ்ந்த 7 பெண்கள் மாா்கழி முழுவதும் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி ஆண்டாள் திருப்பாவை பாராயண கோஷ்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா். கிருஷ்ணன் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT