திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றம் வரும் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இக் கோயில் தைப்பூச கொடியேற்றம் 19 ஆம் தேதி காலை முதல் 7 மணிக்குள் கோயிலின் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையரும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் இணை ஆணையருமான ( பொ ) கே.பி. அசோக்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் செய்கின்றனா்.