திருச்சி

திருச்சி அருகே வீடு புகுந்து திருட்டு

DIN

திருச்சி அருகே வீடு புகுந்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் காசிவிஸ்வநாதன் மனைவி உமாமகேஸ்வரி (56). கடந்த 18 ஆம் தேதி கேரளத்தில் உள்ள மகள் வீட்டுக்கு மகன் சித்துவுடன் சென்ற உமாமகேஸ்வரி சனிக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.24 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பூஜை பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சில முக்கிய தடயங்களைச் சேகரித்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT