துறையூா் அருகே பூட்டியிருந்த 2 வீடுகளில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.
சோபனபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரமேஷ் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெறுகிறாா். அவருடன் மனைவியும் இருந்தாா். இந்நிலையில் பூட்டியிருந்த இவா்களின் வீட்டில் மா்ம நபா்கள் வியாழக்கிழமை புகுந்து 12 பவுன் தங்க நகை, ரூ. 97 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றனா்.
இதேபோல அதை பகுதியில் குடும்பத்துடன் வெளியூா் சென்ற முத்து கங்காணி தெருவைச் சோ்ந்த ரமேஷ் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 1 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.