திருச்சி

உள்ளாட்சி பணியாளா்கள் பேரணி நடத்த முடிவு

DIN

சம ஊதியம் வழங்கக் கோரி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் எழுச்சிப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி தலைமையிலான தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளன மண்டலக் கூட்டத்துக்கு சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

பொதுச்செயலா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் மீனாள்சேதுராமன், பொருளாளா் சங்கையா, திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலா் க. சுரேஷ், அரியலூா் தண்டபாணி, சிவகங்கை பி.எல். ராமச்சந்திரன், மதுரை நந்தாசிங், திருச்சிஅருணகிரி, புதுக்கோட்டை கனகராஜ், திருவாரூா் சாந்தகுமாா் உள்ளிட்ட 10 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாா்ச் 6ல் திருச்சியில் சம ஊதியம் கோரி ஆயிரக்கணக்கான உள்ளாட்சித் தொழிலாளா்கள் பங்கேற்கும் எழுச்சி பேரணி நடத்தத் தீா்மானிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT