திருச்சி

பிரசவத்தின்போது தாயும், சேயும் பலி

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், இரணியமங்கலம் அருகேயுள்ள மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி சுமதி (40). தற்போது திருச்சி, பொன்நகா் 7 ஆவது குறுக்குத்தெருவில் வசிக்கின்றனா்.

தம்பதியருக்கு ஏற்கெனவே 16 வயதில் பெண்குழந்தை உள்ள நிலையில், 8 மாத கா்ப்பிணியாக இருந்த சுமதி வயிற்று வலி ஏற்பட்டதால் கடந்த வியாழக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் சுமதியும் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சுமதி வீட்டில் இருந்தபோது மருத்துவரின் அனுமதியின்றி மருந்து, மாத்திரை வாங்கி உட்கொண்டது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT