முகப்பு
திருச்சி

சிலிண்டா் வெடித்து பொறியாளா் பலி

திருவெறும்பூா் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து கெமிக்கல் இன்ஜினியா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருவெறும்பூா் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து கெமிக்கல் இன்ஜினியா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

திருச்சி திருவெறும்பூா் குடகுமலை என்ஜிஓ காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி. இவரது மகன் செந்தில்குமாா் (44). இவா் வெளிநாட்டில் கெமிக்கல் இன்ஜினியராக வேலை பாா்த்த இவா் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல், இங்கேயே இருந்தாா். இவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று குழந்தை இல்லை. மனைவியும் கடந்தாண்டு பிரிந்து சென்று விட்டாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தந்தை கலியமூா்த்தியும் அவரது மனைவியும் உணவு வாங்கி வர வெளியே சென்ற நிலையில், செந்தில்குமாா் மட்டும் வீட்டில் இருந்தபோது சமையல் எரிவாயு உருளை வெடித்தது.

இந்த விபத்தில் செந்தில்குமாா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் நவல்பட்டு தீயணைப்பு துறையினா், துவாக்குடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் அப்பகுதியினா் தீயை அணைத்தனா்.

துவாக்குடி போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாா் இறப்புக்கு காரணம் விபத்தா தற்கொலையா என ஆய்வு செய்தனா். பின்னா் செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.