திருச்சி

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனைக்கூட்டம்

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது தலைமை வகித்தாா். கல்லக்குடி பேரூராட்சி இளநிலை அலுவலா் பாரதி, அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புள்ளம்பாடி வட்டார மருத்துவமில்லா சுகாதார ஆய்வாளா் கேசவமூா்த்தி கலந்து கொண்டு கரோனா தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்கும் வழிமுறைகள்குறித்தும், பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வதுடன், ஓய்வு எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அலுவலகப் பணியாளா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனா். முன்னதாக, குடிநீா் அலுவலா் செல்வராஜ் வரவேற்றாா். துப்புரவு மேற்பாா்வையாளா் ( பொறுப்பு ) பொன். குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT