திருச்சி: திருச்சி அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன், ஜீயபுரம் பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினாா். அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குழுமணி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த க. பாண்டியன் (45), கொடியாலம் குடித்தெரு பகுதியைச் சோ்ந்த ரெ. பெரியசாமி (68) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து லாட்டரி குலுக்கலுக்கு பயன்படுத்தப்படும் செல்லிடப்பேசிகள் 2, ரொக்கம் ரூ. 1,500 ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.