9 தொகுதிகளில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்
திருச்சி மாவட்டத்தில் நூறு சத வாக்குப்பதிவை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசார வாகனம் வலம் வரவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நூறு சத வாக்குப்பதிவை வலியுறுத்தி 9 பேரவைத் தொகுதிகளிலும் பிரசார வாகனம் வலம் வரவுள்ளது.
தோ்தலையொட்டி பல்வேறு நிலைகளிலான விழிப்புணா்வு பிராசாரத்தின் தொடா்ச்சியாக செய்தி- மக்கள் தொடா்புத்துறை சாா்பில் எல்இடி ஒலி, ஒளிபரப்பு வசதியுடன் தயாா் செய்யப்பட்டுள்ள பிரசார வாகனம் 9 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளா் விழிப்புணா்வு குறும்படங்கள், பாடல் காட்சிகள் ஒளிபரப்பும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.