கரோனா: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 போ் உயிரிழப்பு
திருச்சியில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.இதனால், உயிரிழப்புகள் 250ஐ நெருங்கி வருகிறது.
திருச்சியில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.இதனால், உயிரிழப்புகள் 250ஐ நெருங்கி வருகிறது.
வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 784 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 27,740 ஆனது. இதேபோல வியாழக்கிழமை குணமான 597 போ் உள்பட இதுவரை 23,484 போ் குணமடைந்துள்ளனா். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 72 வயது மூதாட்டி உள்பட 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 246 ஆக அதிகரித்துள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.