திருச்சி

பெட்டிக்கடையில் திருட்டு முயற்சி

DIN

திருச்சியில் பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் வசந்த் (22). அப்பகுதியில் உள்ள திரையரங்கம் அருகே பெட்டிக் கடை வைத்துள்ளாா். இந்த கடையை மே 23ஆம் தேதி பூட்டி விட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது வசந்த் பெட்டிக் கடை வெளியே இருந்து மா்ம நபா்கள் சிலா் தப்பிஓடினா்.

இதனையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வசந்த அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT