திருச்சி

அண்ணணை அடித்துக் கொன்ற தம்பி கைது

DIN

ஸ்ரீரங்கத்தில் மனநலம் பாதித்த அண்ணணை அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு முனிசிபல் காலனி பகுதியை சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகன்கள் துரைசாமி (37), ஐயப்பன் (36). மனநலம் பாதிப்புக்குள்ளான துரைசாமி வீட்டிலேயே இருந்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சாலையில் கிடந்த துண்டு பீடியை எடுத்து துரைசாமி குடித்துள்ளாா். இதைகண்ட ஐயப்பன், அண்ணன் துரைசாமியை திட்டி அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த துரைசாமியை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT