போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற இளைஞா் கைது
போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற கடலூரைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற கடலூரைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு துபை செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் செல்லவிருந்த கடலூா் மாவட்டம், வேப்பூா் கோபால் மகன் கல்வராயன்(32) என்பவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூா் கண்ணன் மகன் ராஜா (27) என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.