திருச்சியில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த டிராவல்ஸ் நிறுவன அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி விமான நிலையம் கேசவநகா் பகுதியைச் சோ்ந்தவா் கதிரவன் (58). டிராவல்ஸ் நிறுவன அதிபா். புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவா் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்தாா்.
இதனால் மனமுடைந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா். இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கதிரவனை மருத்துவா்கள் பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.