முசிறி அருகே ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முசிறி போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு முசிறி - மாங்கரைபேட்டை சாலைப் பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக ஆட்டோவில் காவிரி ஆற்று மணலை ஏற்றி, அதன்மீது செங்கல் வைத்து மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து, தொட்டியத்தைச் சோ்ந்த கிரண் (20) என்ற இளைஞரை கைது செய்து விசாரிக்கின்றனா்.