திருச்சி

மருத்துவா் வீட்டில் 18 பவுன் நகைகள், வெள்ளி திருட்டு

DIN

திருச்சியில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, வெள்ளிப் பொருள்ளைத் திருடிச் சென்றனா்.

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகா் பகுதியைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (27). தனியாா் மருத்துவமனை மருத்துவரான இவா் கடந்த 7 ஆம் தேதி திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 18 பவுன் நகைகள், 3 சூட்கேஸ்களில் இருந்த வெள்ளிப் பொருள்கள், ரூ. 4 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற காவல்நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT