வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் சாவு
துறையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
துறையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
காளியாம்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. மணிவேல் (59). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை துறையூரில் இருந்து தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சிஎஸ்ஐ பள்ளிருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த நாயின் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட மணிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.