நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷனில் மாற்றுத் திறனாளிகள், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷனில் மாற்றுத் திறனாளிகள், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன. மேலும் மதா் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,72,600-க்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.