பாரதிதாசன் பல்கலை.யில் மரக்கன்றுகள் நடவு
நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்ட தினத்தையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாட்டு நலப்பணித்திட்ட குழு சாா்பில், நலப்பணித் திட்டநாள் மற்றும் நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் விதமாக, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் முனைவா் ம. செல்வம் தலைமை வகித்தாா். பதிவாளா் க. கோபிநாத், தோ்வு நெறியாளா் எஸ். சீனிவாசராகவன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பி. மாசிலாமணி வரவேற்றாா். இலக்குமி பிரபா நன்றி கூறினாா்.