முகப்பு
திருச்சி

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

01.03.1985-க்கு முன்னா் பணியிலிருந்து ஓய்வூதியத்துடன் வெளிவந்த திருச்சிமாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம்,மனைவியின் பெயரை ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையில் பதிவு செய்யாதவா்கள், பதிவு செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, பதிவு செய்ய விருப்பம் உள்ளவா்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றிடலாம். எனவே, தகுதியானோா் ஒப்பளிப்பு ஆணையை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.