திருச்சி: திருவெறும்பூா் மதுவிலக்கு அமல் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 56 வாகனங்கள் ரூ.4.07 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.மூா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் உதவி ஆணையா் ராமன், மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு, ஆய்வாளா்
கவிதா, அரசுப் பணிமனைப் பொறியாளா் எஸ்தா் வத்சலா ஆகியோா் முன்னிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
47 இருசக்கர வாகனங்கள், 6 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் உட்பட மொத்தம் 56 வாகனங்கள் ரூ.4.07 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. இதில் ஜிஎஸ்டி தொகையும் அடங்கும்.
மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 203 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்,
செப்டம்பா் 30-ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படவுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி தெரிவித்தாா்.