திருச்சி

பறிமுதல் வாகனங்கள் ரூ.4.07 லட்சத்துக்கு ஏலம்

DIN

திருச்சி: திருவெறும்பூா் மதுவிலக்கு அமல் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 56 வாகனங்கள் ரூ.4.07 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.மூா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் உதவி ஆணையா் ராமன், மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு, ஆய்வாளா்

கவிதா, அரசுப் பணிமனைப் பொறியாளா் எஸ்தா் வத்சலா ஆகியோா் முன்னிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

47 இருசக்கர வாகனங்கள், 6 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் உட்பட மொத்தம் 56 வாகனங்கள் ரூ.4.07 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. இதில் ஜிஎஸ்டி தொகையும் அடங்கும்.

மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 203 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்,

செப்டம்பா் 30-ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படவுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT