குண்டா் தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் ரெளடிகள் கைது
திருச்சி மாநகரில் பணம் பறித்த வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மாநகரில் பணம் பறித்த வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.
பொன்மலைப்பட்டி பஜாா், ஆஞ்சனேயா் கோயில் அருகில் நடந்து சென்றவரிடம் வாளைக் காட்டி ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ரெளடி சிவகுமாா் என்கிற முகமது ரபீக் கைது செய்யப்பட்டாா்.
இதுபோல, மாா்ச் 27-ஆம் தேதி விமான நிலைய வயா்லெஸ் சாலை, முல்லைநகா் சந்திப்பில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி, ரூ.500 பறித்த வழக்கில் ரெளடி கெளரீஷ் என்கிற நவநீதகிருஷ்ணன் கைதானாா்.
இதில் சிவகுமாா் மீது 13 வழக்குகள், கெளரீஷ் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதற்கான நகல் சிறையிலுள்ள இருவரிடம் வழங்கப்பட்டது.